Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

நவம்பர் 25, 2023 11:31

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மல்லசமுத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயப்பிரபா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் வையப்பமலை பிர்கா விவசாயிகள் வெங்காயம் சிறப்பு பருவம் 2 ல் பயிர் செய்தமைக்கு காப்பீடுசெய்ய வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் பயிர்கடன், நகைக்கடன் பெறும்போது, சுய விருப்பத்தின் பேரில் காப்பீடு பிரீமியம் செலுத்தி திட்டத்தில் இணையலாம். 

மேலும், பொது சேவை மையம் மூலம் பிரீமிய தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகளின் ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் பதிவு கட்டணமாக ஏக்கருக்கு பிரீமிய தொகையாக ரூ.2050.10 பைசாவை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன்பின் பயிர் காப்பீடு செய்ய இயலாது.

எனவே தாமதிக்காமல் மல்லசமுத்திரம் வட்டார வையப்பமலை பிர்கா விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளவும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தலைப்புச்செய்திகள்